கடன் பத்திரங்கள் [Bonds]:-
நிறுவனங்கள் தனது நிதியை உயர்த்துவதற்காக கடன் பத்திரங்களை வெளியிடும். நிர்ணயக்கப்பட்ட வட்டியை ஈட்டித்தரும் இந்த கடன் பத்திரங்கள் ஒரு வருடத்திற்கு மேலான கால அளவை கொண்டதாகவே இருப்பவை.
மத்திய மற்றும் மாநில அரசுகளும் பெருநிறுவனங்கள் மற்றும் பெரிய அமைப்புகளும் கடன் பத்திரங்களை விற்பனை செய்கின்றன. கடன் பத்திரம் என்பது குறிப்பிட்ட நாளன்று [முதிர்வு நாள்/maturity date] முதல் மற்றும் முதலுக்கு நிர்ணயக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வட்டியையும் திருப்பி தருவதாக கூறும் உத்திரவாதமாகும்.
வங்கி வைப்புத் தொகை போல நிலையான/நிர்ணயக்கப்பட்ட வருவாயை ஈட்டக் கூடியவை.
சராசரியாக 10-12% என்ற வட்டி விகிதத்தில் ஆண்டு வருமானத்தை இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கடன் பத்திரங்கள் மீதான முதலீடுகள் ஈட்டித்தருகின்றன.
முதலீடுகள் - க்காக சதீஷ் குமார்

nice post mams
ReplyDeletethanks mr.anonymous!
ReplyDelete