Friday, September 16, 2011

தமிழ்நாட்டில் இனி Petrol ரூ.70.05/lt.







Petrol prices in India are costlier than the US but cheaper than European countries, Minister of State for Petroleum and Natural Gas R P N Singh said in New Delhi. 

Petrol in Delhi is priced at Rs 63.70 a litre, while the same in USA is priced at Rs 42.82 per litre. The price in India is more than any of its neighbours -- Pakistan (Rs 41.81 a litre), Sri Lanka (Rs 50.30 per litre), Bangladesh (Rs 44.80 a litre) and Nepal (Rs 63.24 per litre).

But the rate in Delhi is cheaper than France (Rs 94.97 per litre), Germany (Rs 95.99 a litre), the United Kingdom (Rs 96.39 per litre) and Italy (Rs 96.79 a litre), he said in a written reply to a question in the Rajya Sabha.

இந்த Petrol விலை ரொம்ப குழப்பமான விஷயம். அதுவும் இந்தியால ரொம்பவே பெரிய குழப்பமான விஷயம். 

159 liters of Crude Oil = 73.8 liters of Petrol + LPG,Diesel,Kerosene,Jet Fuels + petrochemicals
1 Barrel = $ 110 USD
1 US Dollar = 47 Rupees
1 Barrel = Rs.5170/-

மேல் கூறிய அடிப்படைகளின்படி கணக்கிட்ட பின் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகளையும் மத்திய அரசின் வரிகள் மற்றும் மாநில அரசின் வரிகள் ஆகியவற்றை சேர்த்தால் தலை சுற்றுகிறது!

அடிக்கடி Petrol விலை ஏறுவதற்கு பல காரணங்கள் ஒன்று சேருகின்றன!

முதல் காரணம், மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கி வந்த மானியத்தை நிறுத்திவிட்டு, மேலும் எண்ணெய் நிறுவனங்களை Petrol, LPG & Jet Fuel போன்றவற்றிற்கு விலை நிர்ணயம் செய்ய உரிமை வழங்கியதும்தான். 

கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தினால் Petrol விலை ஏறுகிறது என்று சொல்லப்படும் காரணம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்! முன்பெல்லாம் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் போது, அரசு இந்த விலை ஏற்றங்கள் மக்களை பாதிக்காமல் இருக்க Petrol மற்றும் LPG -க்காக மான்யம் வழங்கி வந்தது. சமீபக் காலமாக இல்லை.

 மூன்றாவது காரணம், "அரசு ஏன் இந்த மானியத்தை நிறுத்திவிட்டு எண்ணெய் நிறுவனங்களை  விலை நிர்ணயம் செய்ய சொன்னது?" என்ற கேள்விக்கான பதில்தான். அரசுக்கு Petrol மற்றும் மற்ற எரி பொருள்கள் மூலமான வர்த்தகத்தில் கிடைக்கும் வருவாய் பெரியது, மிகப் பெரியது! இந்த வருவாயை அரசு குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. அப்படி விரும்பி இருந்தால், மானியத்தை நிறுத்திய அரசு, Petrol போன்ற எரிப் பொருள்கள் மிதான ஏகப்படியான வரிகளையாவது குறைத்திருக்கும். 

நான்காவது காரணம், அரசுக்கு இந்த வருவாய் மிக முக்கியமானது. அடுத்த 20 வருடங்களில் இந்தியாவின் உட்கட்டமைப்பை உயர்த்த வருடத்திற்கு ரூ.75000 கொடிகள் (மொத்தம் 15,00,000 கோடிகள்) செலவு செய்யப்படும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மத்திய அமைச்சர் C.P.Joshi அவர்கள் கூறியிருக்கிறார். இந்த வருடத்திற்கு இதுவரை ரூ.21,000 கோடிகள் செலவு செய்யப்பட்டிருக்கிறது. தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய இந்த செலவிற்கு நிதியை சமாளிக்க, அரசுக்கு தன் வருவாய்களை குறைத்துக்கொள்ள விருப்பமில்லை.


ஐந்தாவது காரணம், இந்தியாவின் பெரிய பலவீனம் மோசமான உட்கட்டமைப்புதான். உலகின் அடுத்த வல்லரசாக இடம் பிடிக்க இந்தியாவும் சீனாவும் மிகக் கடுமையான போட்டியில் இருக்கின்றன, ஏன்? வெளிநாட்டு முதலீடுகளை தன் வசம் ஈர்க்க இரு நாடுகளும் விரும்புவதால்தான். சீனா முன்னிலையில் இருப்பதால், உட்கட்டமைப்பை வெகுவிரைவாக உயர்த்த இந்திய அரசு முனைப்புடன் இருக்கிறது. இதற்காக எந்த சமரசத்திற்கும் இடமில்லை. 

மேல் கூறப்பட்ட காரணங்களை கவனித்தீர்களா?

ஆக இனி Petrol மற்றும் LPG  விலை குறைய வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறதல்லவா?. 

20 ஆண்டுகளில் உட்கட்டமைப்புகள் உயர்ந்தபின் அவற்றை அனுபவிக்க யார் இருப்பர்?

ஏற்கனவே சாதாரண மக்கள் விலைவாசி, கடன்களுக்கான வட்டி உயர்வு போன்ற கடினமான சூழ்நிலையில் வாழ்க்கையை சோர்வுடன் தள்ளிக்கொண்டு இருகிறார்கள். தங்களது சேமிப்புகளைக் குறைத்துக் கொண்டு வருகிறார்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்கும் இந்த நிலை தொடர்ந்தாள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தொகை உயரக் கூடும்.

"முதலீடுகள்" -யின் கருத்து:

இனி வரும் வருடங்களில் Petrol -லில் உங்கள் பணத்தை எரித்து சேமிப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டாம். Petrol -லை வசதிக்காக பயன்படுத்தி கரியாக்க வேண்டாம். முடிந்த வரையிலும் மற்றவர்களுக்கு "லிப்ட்" கொடுங்கள். Car ஓட்டுனர்கள் "Car Pooling" செய்ய முன்வாருங்கள். 


மக்கள் இனி பேருந்துகளில் நெரிசலைத் தவிர்க்க மற்ற வாகனங்களில் தயங்காமல் லிப்ட் கேட்கலாம். இல்லையென்றால் Cycle-லை தூசித்தட்டி தயார்ப்படுத்தலாம்.    

"முதலீடுகள்" -க்காக சதீஷ் குமார் 






Wednesday, September 7, 2011

RBI வீட்டுக் கடனுக்கான Prepayment Charges -ஐ ரத்து செய்தது!

மாறும் வட்டி விகிதத்துடன் கூடிய வீட்டு கடன்கள் இனி கூடுதல் கட்டணங்கள் இன்றி முன்முடிக்கலாம்! (Foreclosure charges to be withdrawn for home loans borrowed from banks!). 

தாங்கள் தங்களிடம் உள்ள பங்குகளை பங்கு சந்தையில் விற்றோ, வேறு சொத்துக்களை விற்றோ அல்லது அலுவலகத்தில் Bonus பெற்றாலோ அந்த பெரிய தொகையை வைத்து முதலில் வீட்டுக் கடனை முடித்து விடலாம் என்று தான் நினைப்பீர்கள். அனால் நீங்கள் கடன் வாங்கிய வங்கிக்கு சென்று கேட்டால் மொத்த கடன் தொகையில் வட்டியை தவிர மீதமுள்ள முதல் எவ்வளவு இருக்கிறதோ அதில் 2% (Foreclosure/Prepayment charge) முன்முடிப்புக் கட்டணமாக செலுத்தவேண்டும் என்பார்கள். கடனாளிக்கு கடனை முடித்துக் கொள்ள இது பெரும் சங்கடமாகவே இருக்கும்.

நேற்று (06.09.2011) நடந்த  வங்கிகளின்  வாடிக்கையாளர் குறைத் தீர்க்கும்  மாநாட்டில்  (Banking Ombudsman Conference) வாடிக்கையாளர்  சேவையை  துரிதப்படுத்த பத்து செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன.


அதில் ஒன்று தான் முன்முடிப்புக் கட்டணத்தை மாறும் வட்டிவிகிதத்துடன் கூடிய வீட்டு கடன்களுக்கு ரத்து செய்ய வேண்டும் என்று RBI வங்கிகளுக்குக் கூறியிருப்பது. 

RBI -யின் இந்த நன்செயளுக்கு முன்னோடியாய் இருந்தது Axis Bank தான். Axis Bank மற்ற வங்கிகளின் போட்டியை சமாளிக்க தனது floating rate home loan- ல் prepayment (foreclosure) charge- ஐ ரத்து (௦%) செய்ததே, RBI- யின் இந்த முடிவிற்கு வித்திட்டது என்றே சொல்லவேண்டும்.

இதில் RBI- யின் கருத்து:

          "Foreclosure/Prepayment charges கடனாளிகளையும் மற்றும் வங்கிகளின் ஆக்கப்பூர்வமான போட்டியையும் பாதிக்கிறது". 

ஆனால் நிலையான வட்டிவிகிதத்துடன் கூடிய வீட்டு கடன்களில் (Fixed Rate Home Loans) முன்முடிப்புக் கட்டணம் வசூலிப்பது தொடரும். அதனால் மாறும் வட்டிவிகிதத்தில் இருந்து நிலையான வட்டிவிகிதத்திற்கு வாடிக்கையாளர் இனி மாறும் போதும் (Interest Rate-Swap from Floating to Fixed Rate) முன்முடிப்பிற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

"முதலீடுகள்" கருத்து: 

           இன்னும் ஓரிரு ஆண்டுகளில் RBI -யின் வட்டிவிகிதங்கள் குறைய இருப்பதால், வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்க எண்ணிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் கீழ் உள்ள வாய்ப்புகளை கவனிக்கவும்!

1. வீட்டுக் கடனை Floating rate -யின் அடிப்படையிலேயே வாங்கவும். தற்போதுள்ள அதிக வட்டிவிகிதங்களில் Fixed Rate -யில் கடனை வாங்கினால், ஓரிரு ஆண்டுகளில் வட்டிவிகிதல் குறையும் போதும் அதிக விகிதத்தில் வட்டியை கட்டவேண்டியிருக்கும்.

2. இப்பொழுது RBI வங்கிகளை Floating rate home loan -களில் முன்முடிப்பு செய்யும் போது Prepayment/Foreclosure charges வசூலிக்கக் கூடாது என்று சொல்லியிருப்பதால், இனி நீங்கள் Prepayment/Foreclosure அதாவது தவணைக் காலம் முடிவதற்கு முன்னரே கடனை முழுமையாக செலுத்தும் போது எந்த சங்கடங்களும் இருக்காது.


     ICICI Bank வழங்கும் இரு வேறு வட்டி விகிதங்களைக் கொண்ட கடன் திட்டத்தை பார்க்கும் போது இந்த கடன் திட்டம் முதல் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு Fixed rate -ஆகவும் அதன் பிறகு Floating rate -ஆகவும் மாறிவிடுகிறது. இதனால் RBI வட்டிவிகிதங்களை குறைக்கும் காலங்களில் இந்த கடன் திட்டம் Floating rate -ஆக மாறி தானாக வட்டியைக் குறைத்து உங்களுக்கு பயனளிக்கும்.


     HDFC Bank அளிக்கும் 'Fixed First' திட்டம் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு Fixed rate அளித்த பிறகு Floating rate -ஆக மாறக்கூடியது. இந்த திட்டம் 31,October'2011 வரை மட்டுமே கிடைக்கும்.

     இருப்பினும் அவசரப்பட வேண்டாம். சாதாரண Floating rate திட்டத்தையே  நீங்கள் நாடலாம்.

     நன்கு ஆராய்ந்த பின் கடனைப் பெற்று உங்கள் கனவு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். "முதலீடுகள்" வாழ்த்துகிறது!

"முதலீடுகள்" -க்காக சதீஷ் குமார் 




Monday, September 5, 2011

HDFC-யின் புதிய வீட்டுக் கடன் திட்டம்

Floating/Adjustable interest rate என்ற மாறக்கூடிய வட்டி விகிதத்தில் கடனைப் பெற்றால் ஏற்றத் தாழ்வுடன் (பெரும்பாலும் ஏற்றம் மட்டுமே) கூடிய மாதத் தவனையையே  திரும்ப செலுத்த நேரிடும். இதனால் மாத சம்பளத்தையே நம்பியிருக்கும் நடுத்தர வர்க்கம் போடும் வீட்டிற்கான மாத budget-ட்டிலும் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வு ஏற்படும். 

இவ்வாறான பாதிப்பை தவிர்க்க, HDFC -யின் "Fixed First" திட்டம் ஒரு குறுகியக் கால வாய்ப்பினை வழங்குகிறது!


HDFC  "Fixed First" என்ற புதிய வீட்டு கடன் வசதியை இன்று அறிமுகம் செய்துள்ளது!

இந்த வசதியின்படி, கடன் பெறுவோர் கடனை திருப்பி செலுத்தும் ஆரம்பக் காலத்தில் 3 அல்லது 5 வருடங்களுக்கு நிலையான வட்டி விகிதத்தில் செலுத்தலாம். அதன் பின் வரும் காலங்களில், இந்தத் திட்டம் மாறக்கூடிய வட்டி விகிதத்தில் கடனை திருப்பி செலுத்தும் வகையில் தானாக மாறிவிடும்!

HDFC-யில் ஏற்கனவே இருக்கும் கடன் திட்டங்களில் இந்த "Fixed First" ஒரு புதிய சேர்க்கையாகும்.

இந்த திட்டம் கடனை திருப்பி செலுத்தும் ஆரம்பக் காலத்தில் வட்டி விகிதயேற்றதினால் பாதிப்பு அடையக் கூடாது என்று எண்ணும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

இந்த திட்டத்தில் பயனடைய தகுதி: வாடிக்கையாளர் 31, October'2011 அன்றோ அல்லது முன்னதாகவோ விண்ணப்பிக்கவேண்டும், மேலும் கடனில் முதல் தவணையை 30,November'2011 அன்றோ அல்லது முன்னதாகவோ பெறவேண்டும்.

HDFC “Fixed First” interest rate:
Applicable rates
Fixed Rates

(Monthly interest basis)
In (% pa)


3 year option
5 year option
Upto Rs. 30 lakhs
10.75
11.25
Rs. 30.01 lakhs to Rs. 75 lakhs
11.25
11.5
Over Rs. 75 lakhs
11.75
11.75

3 ஆண்டுக் காலத் திட்டத்தில், 30,November'2014 வரை நிலையான விட்டி விகிதத்தை பெறலாம்.

5 ஆண்டுக் காலத் திட்டத்தில், 30,November'2016 வரை நிலையான விட்டி விகிதத்தை பெறலாம்.

நிலையான வட்டி விகிதக் காலம் முடிந்த பிறகு, இந்தத் திட்டம் HDFC-யின் Retail Prime Lending Rate-உடன் இணைக்கப்பட்ட Adjustable Rate Home Loan (ARHL) திட்டத்திற்கு தானாக மாறிவிடும்.

 "முதலீடுகள்!"-க்காக சதீஷ் குமார்