Friday, September 16, 2011

தமிழ்நாட்டில் இனி Petrol ரூ.70.05/lt.







Petrol prices in India are costlier than the US but cheaper than European countries, Minister of State for Petroleum and Natural Gas R P N Singh said in New Delhi. 

Petrol in Delhi is priced at Rs 63.70 a litre, while the same in USA is priced at Rs 42.82 per litre. The price in India is more than any of its neighbours -- Pakistan (Rs 41.81 a litre), Sri Lanka (Rs 50.30 per litre), Bangladesh (Rs 44.80 a litre) and Nepal (Rs 63.24 per litre).

But the rate in Delhi is cheaper than France (Rs 94.97 per litre), Germany (Rs 95.99 a litre), the United Kingdom (Rs 96.39 per litre) and Italy (Rs 96.79 a litre), he said in a written reply to a question in the Rajya Sabha.

இந்த Petrol விலை ரொம்ப குழப்பமான விஷயம். அதுவும் இந்தியால ரொம்பவே பெரிய குழப்பமான விஷயம். 

159 liters of Crude Oil = 73.8 liters of Petrol + LPG,Diesel,Kerosene,Jet Fuels + petrochemicals
1 Barrel = $ 110 USD
1 US Dollar = 47 Rupees
1 Barrel = Rs.5170/-

மேல் கூறிய அடிப்படைகளின்படி கணக்கிட்ட பின் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகளையும் மத்திய அரசின் வரிகள் மற்றும் மாநில அரசின் வரிகள் ஆகியவற்றை சேர்த்தால் தலை சுற்றுகிறது!

அடிக்கடி Petrol விலை ஏறுவதற்கு பல காரணங்கள் ஒன்று சேருகின்றன!

முதல் காரணம், மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கி வந்த மானியத்தை நிறுத்திவிட்டு, மேலும் எண்ணெய் நிறுவனங்களை Petrol, LPG & Jet Fuel போன்றவற்றிற்கு விலை நிர்ணயம் செய்ய உரிமை வழங்கியதும்தான். 

கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தினால் Petrol விலை ஏறுகிறது என்று சொல்லப்படும் காரணம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்! முன்பெல்லாம் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் போது, அரசு இந்த விலை ஏற்றங்கள் மக்களை பாதிக்காமல் இருக்க Petrol மற்றும் LPG -க்காக மான்யம் வழங்கி வந்தது. சமீபக் காலமாக இல்லை.

 மூன்றாவது காரணம், "அரசு ஏன் இந்த மானியத்தை நிறுத்திவிட்டு எண்ணெய் நிறுவனங்களை  விலை நிர்ணயம் செய்ய சொன்னது?" என்ற கேள்விக்கான பதில்தான். அரசுக்கு Petrol மற்றும் மற்ற எரி பொருள்கள் மூலமான வர்த்தகத்தில் கிடைக்கும் வருவாய் பெரியது, மிகப் பெரியது! இந்த வருவாயை அரசு குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. அப்படி விரும்பி இருந்தால், மானியத்தை நிறுத்திய அரசு, Petrol போன்ற எரிப் பொருள்கள் மிதான ஏகப்படியான வரிகளையாவது குறைத்திருக்கும். 

நான்காவது காரணம், அரசுக்கு இந்த வருவாய் மிக முக்கியமானது. அடுத்த 20 வருடங்களில் இந்தியாவின் உட்கட்டமைப்பை உயர்த்த வருடத்திற்கு ரூ.75000 கொடிகள் (மொத்தம் 15,00,000 கோடிகள்) செலவு செய்யப்படும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மத்திய அமைச்சர் C.P.Joshi அவர்கள் கூறியிருக்கிறார். இந்த வருடத்திற்கு இதுவரை ரூ.21,000 கோடிகள் செலவு செய்யப்பட்டிருக்கிறது. தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய இந்த செலவிற்கு நிதியை சமாளிக்க, அரசுக்கு தன் வருவாய்களை குறைத்துக்கொள்ள விருப்பமில்லை.


ஐந்தாவது காரணம், இந்தியாவின் பெரிய பலவீனம் மோசமான உட்கட்டமைப்புதான். உலகின் அடுத்த வல்லரசாக இடம் பிடிக்க இந்தியாவும் சீனாவும் மிகக் கடுமையான போட்டியில் இருக்கின்றன, ஏன்? வெளிநாட்டு முதலீடுகளை தன் வசம் ஈர்க்க இரு நாடுகளும் விரும்புவதால்தான். சீனா முன்னிலையில் இருப்பதால், உட்கட்டமைப்பை வெகுவிரைவாக உயர்த்த இந்திய அரசு முனைப்புடன் இருக்கிறது. இதற்காக எந்த சமரசத்திற்கும் இடமில்லை. 

மேல் கூறப்பட்ட காரணங்களை கவனித்தீர்களா?

ஆக இனி Petrol மற்றும் LPG  விலை குறைய வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறதல்லவா?. 

20 ஆண்டுகளில் உட்கட்டமைப்புகள் உயர்ந்தபின் அவற்றை அனுபவிக்க யார் இருப்பர்?

ஏற்கனவே சாதாரண மக்கள் விலைவாசி, கடன்களுக்கான வட்டி உயர்வு போன்ற கடினமான சூழ்நிலையில் வாழ்க்கையை சோர்வுடன் தள்ளிக்கொண்டு இருகிறார்கள். தங்களது சேமிப்புகளைக் குறைத்துக் கொண்டு வருகிறார்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்கும் இந்த நிலை தொடர்ந்தாள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தொகை உயரக் கூடும்.

"முதலீடுகள்" -யின் கருத்து:

இனி வரும் வருடங்களில் Petrol -லில் உங்கள் பணத்தை எரித்து சேமிப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டாம். Petrol -லை வசதிக்காக பயன்படுத்தி கரியாக்க வேண்டாம். முடிந்த வரையிலும் மற்றவர்களுக்கு "லிப்ட்" கொடுங்கள். Car ஓட்டுனர்கள் "Car Pooling" செய்ய முன்வாருங்கள். 


மக்கள் இனி பேருந்துகளில் நெரிசலைத் தவிர்க்க மற்ற வாகனங்களில் தயங்காமல் லிப்ட் கேட்கலாம். இல்லையென்றால் Cycle-லை தூசித்தட்டி தயார்ப்படுத்தலாம்.    

"முதலீடுகள்" -க்காக சதீஷ் குமார் 






No comments:

Post a Comment